நம் நாட்டில் உள்ள பல சாதனையாளர்களின் பக்கங்களை திருப்பி பார்த்தால், அந்த சாதனைக்கு காரணமாக அவர்கள் கூறும் வார்த்தைகள் இரண்டு தான்.
ஒன்று விடா முயற்சி மற்றொன்று நம்பிக்கை. இந்த இரண்டை மட்டும் நம்பி பயணித்தால் நமது இலக்கை எளிதில் அடைந்து விடலாம்.
அப்படியாக, தென் தமிழகத்தில் பல முதலீட்டார்களை தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த FRM Builders‘ன் நிர்வாக இயக்குனர் திரு.ராஜா.
34 வயதுடைய இவர் ஒரு மென்பொருள் பொறியியல் பட்டதாரி. கல்லூரி படிப்பை முடித்த கையோடு தனக்கான பாதையை நேர்த்தியோடு, சரியான திட்டமிடலோடு ஆரம்பித்து அதில் பயணிக்க ஆரம்பித்தார்.
அப்படியாக உருவாக்கப்பட்டதுதான் ‘FRM Builders‘. தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டத்தில் பல வீடுகள் இவருடைய நிறுவனத்தால் உருவாக்கப்பட்டதுதான்.
இவரின் நேர்மை, தரத்தை கண்டு பல ஆஃபர்கள் கைமேல் வந்து நின்றன. அதில் வெற்றியும் கண்டு சாதனையும் கண்டார்.
“இன்னும் நான் செல்ல வேண்டிய தூரம் நிறைய இருக்கின்றன. இப்போதுதான் நான் எனது பயணத்தை துவக்கியுள்ளேன்.” என்று இளம் தலைமுறைக்கு நம்பிக்கை வார்த்தைகளை அள்ளி தெளிக்கிறார் திரு.ராஜா.
தொழிலோடு சமூக சேவை செய்வதிலும் ஆர்வம் கொண்டவராக இருக்கிறார் ராஜா. கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்வது, மரக்கன்றுகள் வழங்குவது, ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவுவது என இவரது உதவிகள் பட்டியலடங்கா நீள்கிறது.
இன்னும் இவரது சேவையும் தொழிலும் மென்மேலும் வளர வாழ்த்துவோம்..
https://www.facebook.com/frm.builders.7/about?lst=100002467096137%3A100010229200873%3A1545674140