Spotlightசினிமா

தனது பள்ளி ஆசிரியர்களை பார்த்து கசிந்துருகிய “பரியேறும்பெருமாள் ” இயக்குனர்!

பரியேறும் பெருமாள் படத்தின் இயக்குனர் மாரிசெல்வராஜ். சினிமாவில் முதல் படத்திலேயே மாபெரும் வெற்றிபெற்றதுடன் பல்வேறு விழாக்களில் விருதுகளையும், பாராட்டுக்களையும் பெற்றுவருகிறது பரியேறும் பெருமாள்.

இந்நிலையில் இயக்குனர் மாரிசெல்வராஜ் தான் படித்த பள்ளிக்கூடத்திற்க்கு பல வருடங்களுக்குப்பிறகு சென்று தனது பள்ளி ஆசிரியர்களை சந்தித்திருக்கிறார்.
திருநெல்வேலி அருகில் உள்ள கருங்குளம் அரசு மேல் நிலைப்பள்ளி க்கு சென்ற இயக்குனர் இந்த சந்திப்பைப்பற்றி கூறுகையில்…

பதினாறு வருடங்களுக்கு பிறகு பள்ளிகூடத்திற்கு போயிருந்தேன். என்னை பார்த்தவுடன் பத்மா டீச்சர் சிரித்த சிரிப்பும் அடைந்த கொண்டாட்டமும் போதும் நான் எடுத்த சினிமா என்னை எல்லாருக்குமே மீட்டெடுத்து கொடுத்திருக்கிறது அந்த முழு நாளும் என் ஆசிரியர்களின் உள்ளங்கையில் குளிர்ந்து இருந்தேன் நான்.

என் கனவு என் தவறுகளை அங்கீரத்தது முட்டி போட்ட வகுப்பறையை முத்தமிட வைத்தது
உடைத்து நொறுங்கிய பெஞ்சுகளை எல்லாம் தேடி போய் தேம்பி அழ வைத்தது.
கசிந்துருகிய கண்ணீரில் தெரிந்துகொண்டேன் என்னை விட என் கனவு என்னை அதிகம் நேசிக்கிறது என்கிறார்.

தனது ஆசிரியர்களோடு புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு அவர்களிடம் வாழ்த்துக்களை பெற்றது பெரும் மகிழ்ச்சியளிக்கிறது என்கிறார் மாரிசெல்வராஜ்.

Facebook Comments

Related Articles

Back to top button