சமீப காலமாக மிகவும் பிரபலமான ஹீரோயினாக வலம் வந்து கொண்டிருக்கிறார் கங்கனா ரெனாவத். கமாண்டோ படை வீரர்களை தனது பாதுகாப்பிற்கு வரவைக்கும் அளவிற்கு ட்விட்டர் அரசியலில் வீரம் காட்டினார்.
இந்நிலையில் எல் விஜய் இயக்கத்தில் ’தலைவி’ என்ற படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் ஜெயலலிதாவாக கங்கானா தான் நடித்து வருகிறார். எம் ஜி ஆர்-ஆக அரவிந்த்சாமி நடித்து வருகிறார்.
மேலும், பிரகாஷ்ராஜ், சமுத்திரகனி, பூரணா, மதுபாலா உள்ளிட்ட நட்சத்திரங்களும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
இப்படத்தில் தான் நடித்த அனுபவம் குறித்தும் இயக்குனர் விஜய் குறித்தும் தனது ட்விட்டர் பக்கத்தில் விஜய் தெரிவித்ததாவது,
”அன்புள்ள விஜய் சார், ‘தலைவி’ படத்தின் டப்பிங் முதல் பாதி முடிந்தது. இன்னும் இரண்டாம் பாதி மட்டுமே மீதமுள்ளது. இதனோடு நமது இந்தப் பயணம் முடிவுக்கு வர இருக்கிறது. ஒரு நடிகையாக நான் நன்றாக நடிக்கும்போது உங்கள் கண்கள் பிரகாசமாகும். பல ஏற்ற, இறக்கங்கள் இருந்தாலும், நான் உங்களிடம் ஒரு துளி கோபத்தையோ, அச்சத்தையோ, விரக்தியையோ பார்த்தது இல்லை.
உங்களை பல வருடங்களாக அறிந்தவர்களிடம் உங்களைப் பற்றி பேசினேன். உங்களைப் பற்றி பேசும்போது, அவர்கள் கண்களும் பிரகாசமடைகின்றன. விஜய், நீங்கள் மனிதரே அல்ல, கடவுள். உங்களுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவிக்க விரும்புகிறேன். நான் உங்களை மிஸ் செய்கிறேன்”. இவ்வாறு கங்கனா ரணாவத்” குறிப்பிட்டுள்ளார்.