தமிழ்நாடு

வானில் கருப்பு பலூன்.. வேல்முருகனின் போராட்டம்!

சென்னையில் கிரிக்கெட் வீரர்கள் வெளியே செல்லும்போது அசம்பாவிதம் நேரிட்டால் தாங்கள் பொறுப்பு அல்ல.

ஐ.பி.எல். போட்டிகளுக்காக சென்னையில் தங்கியிருக்கும் கிரிக்கெட் வீரர்கள் வெளியே செல்லும்போது அசம்பாவிதம் நேரிட்டால் தாங்கள் பொறுப்பு அல்ல என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் எச்சரித்துள்ளார்.

சென்னை சேப்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய வேல்முருகன், ஐ.பி.எல். போட்டி நடத்தப்பட்டால் அதை தடுத்து நிறுத்த முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என கூறினார்.

ஐபிஎல்லுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அனைவரும் வானில் கறுப்பு பலூன்களை பறக்கவிடுமாறு கேட்டுக்கொண்ட வேல்முருகன் அடையாளமாக சேப்பாக்கம் மைதானம் முன்பு கறுப்பு பலூன்களை பறக்கவிட்டார்.

Facebook Comments

Related Articles

Back to top button