Spotlightசினிமா

தொடர் தோல்வி; ‘சித்தி 2’வை கையில் எடுத்த ராதிகா சரத்குமார்!

1999 முதல் 2001 வரை சன் டிவி’யை ஆக்கிரமித்த தொடர் தான் ராதிகா சரத்குமார் நடித்த ‘சித்தி’. தமிழகம் மட்டுமல்லாது உலகம் வரை இந்த தொடர் பல குடும்பங்களின் ஆஸ்தான ஒரு தொடராக மாறியது.

இந்த நிகழ்ச்சி மூலம் இரவு 9.30 – 10.00 மணி வரை சன் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர் ராதிகா சரத்குமார் (ராடன் நிறுவனம்)உடையதாக மாறியது. அதன் பிறகு பல தொடர் வந்தாலும் சித்தி தொடரை எந்த ஒரு நிகழ்ச்சியாலும் ஓவர் டேக் செய்ய முடியவில்லை.

ஆனால், இதில் திடீர் மாற்றமாக கடைசியாக வெளிவந்த ‘சந்திரகுமாரி’ தொடர் இரவு 9.30 மணியிலிருந்து மாலை 6.30 மணிக்கு மாற்றப்பட்டது. இந்நேர மாற்றத்தோடு இன்னொரு மாற்றமாக ராதிகாவும் நடிப்பிலிருந்து சில மாத விடுமுறையையும் அறிவித்தார். மீண்டும் 9.30 மணி ஸ்லாட் தனக்குக் கிடைக்கும்வரை ராதிகா விடுப்பில் இருப்பார் என சின்னத்திரை வட்டாரங்கள் கிசுகிசுத்தன.

இந்நிலையில் தான் ராடன் நிறுவனம் பல தோல்விகளை சந்தித்து தொடர் நஷ்டத்தில் இயங்கி வருவதாக தகவல் வெளியானது. சித்தி மாதிரியான ஒரு ப்ராஜக்ட் கையில் எடுத்தால மட்டுமே மீண்டும் பழைய நிலைக்கு வர முடியும் என்ற நிலையில், ‘சித்தி 2’வை கையில் தூக்கியிருக்கிறார் ராதிகா.

இதற்கான ஆரம்பகட்ட பணிகளை இப்போது துவக்கியிருக்கிறாராம் ராதிகா சரத்குமார். சித்தி தொடரில் இடம் பெற்ற ‘கண்ணின் மணி’ என்ற பாடலை போன்றே ஒரு பாடலை தற்போது தேர்வு செய்து வருகிறாராம்.

பொன்வண்ணன், முன்னாள் நடிகை ரூபிணி, நிஷாந்தி (பானுப்பிரியாவின் தங்கை), டேனியல் பாலாஜி, ஆகியோரும் இந்த தொடரில் நடிக்கவிருக்கிறார்கள்.

மீண்டும் 9.30 ஸ்லாட்டை ’சித்தி’ கைப்பற்றுவார் என்கிறது சின்னத்திரை வட்டாரங்கள்…

Facebook Comments

Related Articles

Back to top button