Spotlightதமிழ்நாடு

கஜா புயல் தாக்கம்; ராகவா லாரன்ஸ் அதிரடி அறிவிப்பு!

தமிழகத்தின் 7 மாவட்டங்களில் சில தினங்களுக்கு முன் உலுக்கி எடுத்தது ‘கஜா’ புயல். இதனால் அங்குள்ள மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து நிற்கதியாய் நிற்கின்றனர்.
பலர் தங்களுக்கு முடிந்த நிவாரண உதவிகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், நடிகர் ராகவா லாரன்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ கஜா புயலால் பாதிக்கப்பட்ட நமது விவாசாயிகளுக்கு ஐம்பது வீடுகள் கட்டி கொடுக்க முடிவு செய்துள்ளேன். உங்கள் எல்லோருடைய ஆசீர்வாதம் தேவை…!

கஜா புயல் பாதித்த ஏழு மாவட்ட மக்கள் படும் வேதனையையும் துயரத்தையும் பார்க்கும் போது வேதனை அடைந்தேன். எவ்வளவோ நல்ல உள்ளம் உள்ளவர்களும் அரசாங்கமும் நிவாரணப் பணிகளில் ஈடு பட்டுக் கொண்டிருக்கிறார்கள்

அந்த வீடு மட்டுமில்லை ..இது மாதிரி இடிந்து முற்றிலும் பாதிக்கப் பட்ட 50 வீடுகளை கட்டித் தர உள்ளேன்.

அப்படி பாதிக்கப் பட்டவர்கள் எங்களை தொடர்பு கொண்டால் நானே நேரிடையாக பாதிக்கப்பட்ட பகுதிக்கு சென்று வீடு கட்டித் தந்து அவர்கள் வாழ்வுக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த உள்ளேன்.

ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என்பார்கள். நான் அவர்கள் மூலம் இறைவனைக் காண முயற்சி செய்கிறேன்.

ஒரு தனியார் தொலைகாட்சியும் இந்த விஷயத்தில் எங்களுடன் இணைந்து சில ஆலோசனைகளை வழங்கி வருகிறார்கள்..

அன்பு பத்திரிக்கை நண்பர்களுக்கும் ஒரு வேண்டுகோள். உங்கள் பார்வைக்கு இது மாதிரி பாதிக்கப்பட்டவர்கள் பற்றி ஏதாவது தகவல் வந்தாலும் எங்களிடம் தெரிவிக்கவும்.” என்று கூறியுள்ளார்.

Facebook Comments

Related Articles

Back to top button