உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்றைய போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதிக் கொண்டன.
இப்போட்டியில் 89 ரன்கள் (DLS) வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. காயம் காரணமாக இப்போட்டியில் விளையாடமல் இருக்கு தவானுக்கு பதிலாக தமிழக வீரர் விஜய் ஷங்கர் அணியில் சேர்க்கப்பட்டார்.
நேற்றைய் போட்டியில் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் வீசிய ஓவரின் போது அவருக்கு காயம் ஏற்பட, அந்த ஓவரின் இரண்டு பந்துகளை மட்டும் வீச விஜய் சங்கரிடம் கொடுக்கப்பட்டது.
அவர் வீசிய முதல் பந்திலேயே பாகிஸ்தானின் முதல் விக்கெட்டை வீழ்த்தினார். உலக கோப்பை போட்டியில் முதல் முறையாக களமிறங்கிய விஜய் சங்கர், முதல் பந்திலேயே விக்கெட்டை வீழ்த்தியது அனைவருக்கும் கொண்டாட்டமான நிகழ்வாக அமைந்தது. இது தமிழனுக்கு கிடைத்த பெருமை என நெட்டிசன்கள் இணையத்தில் புகழ் வண்ணத்தை விஜய் சங்கர் மீது தீட்டி வருகின்றனர்.
இப்போட்டியில் அவர் இரண்டு விக்கெட், ஒரு கேட்ச், 15 ரன்கள் என தன்னுடைய திறமையை முதல் போட்டியிலே நிரூபித்து உலகம் புகழ் அடைந்துவிட்டார் விஜய் சங்கர்.