கார்த்தி – ரகுல் ப்ரீத் சிங் ஜோடியாக நடித்து கடந்த வாரம் வெளியான திரைப்படம் ‘தேவ்’. எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை கொடுக்காததால், அடுத்த கதையை முழுக் கவனத்தோடு கையாள இருக்கிறார் கார்த்தி.
தனது அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பினை ரெமோ படத்தின் இயக்குனர் பாக்யராஜ்-ஜிடம் கொடுத்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ள நிலையில் கார்த்திக்கு ஜோடியாக ‘ராஷ்மிகா’ நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தெலுங்கில் மிகப்பெரும் வெற்றியடைந்த கீதா கோவிந்தம் படத்தின் நாயகியாக ராஷ்மிகா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Facebook Comments