Spotlightசினிமா

குறைவா இருந்தாலும் நிறைவா சேரணும்… “ரத்தம்” படக்குழு எடுத்த அதிரடி முடிவு!

யக்குனர் சி எஸ் அமுதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனியின் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் ரத்தம்.

படத்தின் வேலைகள் இறுதிகட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், வரும் 28 ஆம் தேதி படம் திரைக்கு வரும் என படக்குழுவினரால் சில வாரங்களுக்கு முன்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், அதே தினங்களில் வேறு சில படங்களும் ரிலீசுக்கு படையெடுத்தன. சித்தா, பார்க்கிங், ஸ்கந்தா, இறைவன் உள்ளிட்ட படங்களும் அதே தேதியில் ரிலீஸாக இருப்பதாக அறிவித்தது.

இந்நிலையில், யாரும் எதிர்பாரா வண்ணம் மிகப்பெரும் தயாரிப்பு நிறுவனமான லைகா தயாரிப்பில் உருவாகியிருக்கும் சந்திரமுகி 2 படமானது, ஏற்கனவே குறித்த செப்டம்பர் 15 அன்று வெளிவராமல் செப்-28 அன்று வெளியாகும் என அறிவித்தது.

இதனால், 28 அன்று வெளியாகும் படங்களின் குழுவினர் அனைவரும் அதிர்ச்சியாகினர்.

ரத்தம் படத்தின் தயாரிப்பாளர் தனஞ்செயன் இதுகுறித்த தனது ஆதங்கத்தை சமூக பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து நல்லதொரு கதையம்சம் கொண்ட படமானது மக்களிடத்தில் கட்டாயம் சென்றடைய வேண்டும். அதற்கு நாம் அந்த படத்தை மக்களிடத்தில் முறையாக கொண்டு சேர்க்க வேண்டும் என்று கூறி “ரத்தம்” படத்தை அக்டோபர் 6 ஆம் தேதி வெளியிட படக்குழு முடிவெடுத்து அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது.

செப் 28 தினம் என்றால் தொடர் விடுமுறை தினம் இருப்பதால் அந்த தினத்தை சரியான திட்டமிடல் செய்து படத்தை ரிலீஸ் செய்ய காத்திருந்த ரத்தம் படக்குழு, குறைந்த நாட்கள் ஓடினாலும் மக்களிடையே நிறைவா சென்றடையனும் என்று முடிவெடுத்து அக்டோபர் 6-க்கு தள்ளிச் சென்றிருக்கிறார்கள்..

சில தினங்களுக்கு முன் வெளியான ரத்தம் படத்தின் ட்ரெய்லர் இணையத்தில் வைரலாகி சினிமா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

Facebook Comments

Related Articles

Back to top button