Spotlightசினிமா

இதெல்லாம் ஒரு பிழைப்பா… இயக்குனர் சக்தி சிதம்பரம் செய்த மோசடி!

பழம் பெரும் இயக்குனர் சக்தி சிதம்பரம் இயக்கத்தில் தற்போது பிரபுதேவா, மடோனா செபாஸ்டியன் நடித்துள்ள படம் ஜாலியோ ஜிம்கானா. காமெடி திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தில் இருந்து இன்று பாடல் ஒன்று வெளியாகியுள்ளது.

அஸ்வின் விநாயகமூர்த்தி இசையில் உருவாகியுள்ள ”ஒரு போலீஸ் காரன கட்டிக்கிட்டா…. “ என்ற பாடல் தற்போது சமூக வலைத்தளங்களில் பெரும் வைரலாகி வருகிறது. அதன் பாடல் வரிகள் ரசிகர்களை வெகுவாகவே கவர்ந்து வருகிறது. இந்த பாடலை இயக்குனர் சக்தி சிதம்பரம் எழுதியுள்ளதாக கூறப்படும் நிலையில் அதன் உண்மையான பாடலாசிரியர் ஜெகன் கவிராஜ் என்பது நிதர்சனமான உண்மை.

பத்திரிகையாளரான ஜெகன் கவிராஜ் ஜீரக பிரியாணி என்ற பாடலின் மூலம் அனைவராலும் அறியப்பட்டவர். இவர் தொடர்ந்து பாடல்கள் எழுதி வருகிறார். புத்தகங்கள் பலவற்றையும் எழுதியுள்ளார்.

ஜாலியோ ஜிம்கானா படத்தில் இவர் எழுதிய‌ ”ஒரு போலீஸ் காரன கட்டிக்கிட்டா…. “ என்ற இந்த பாடலுக்கு இயக்குனர் சக்தி சிதம்பரம் உரிமை கொண்டாடியிருக்கிறார். இது இணையவாசிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகத்திலே மிக மோசமான ஒன்று என்று உண்டென்றால் அடுத்தவனின் உழைப்பை பச்சையாக திருடிக் கொள்வது. ஒரு பழம் பெரும் இயக்குனர் இப்படியாக ஒரு பாடலாசிரியரின் உழைப்பை திருடியிருப்பது சினிமா வட்டாரத்தில் பேசு பொருளாக மாறியிருக்கிறது.

ஒரு திறமையான கலைஞரின் உழைப்பை திருடுவது என்பது திரையுலகில் புதிதல்ல என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான். ஆனால் ஒரு நல்ல கலைஞரின் உழைப்பு திருடப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாது என ரசிகர்கள் அந்த பாடல் வெளியான யூடியூப் தளத்தில் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.மேலும், எக்ஸ் தளத்திலும் இது குறித்து பலரும் பேசி வருகின்றனர். பாடலாசிரியர் ஜெகன் கவிராஜுக்கு ரசிகர்கள் பலரும் தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்

Facebook Comments

Related Articles

Back to top button