
இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது.
இந்த கொடூர தாக்குதலுக்கு தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சேலம் பாராமெடிக்கல் கல்லூரியில் கல்லூரி மாணவர்கள் 7 பேர் ஊட்டிக்கு காரில் சுற்றுலா சென்றுள்ளனர். கார் அவிநாசி அருகே வந்துகொண்டிருந்தபோது முன்னால் சென்ற சிமெண்ட் லாரி மீது வேகமாக மோதியுள்ளது.
பயங்கர சத்தத்துடன் மோதியதில், இந்த விபத்தில் கார் டிரைவர் உட்பட 5 மாணவர்கள் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 2 மாணவர்கள் படுகாயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் படுகாயமடைந்த மாணவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். கொரோனா விடுமுறைக்கு சுற்றுலா சென்ற கல்லூரி மாணவர்கள் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.





