தாஸ் துரைசாமி இயக்கத்தில் நயன்தாரா நடிக்க இரண்டு வருடத்திற்கு முன் வெளியான படம் தான் ‘டோரா. இப்படம் நயன்தாராவிற்கு மிகப்பெரும் வெற்றியை கொடுத்தது.
இப்படத்தினைத் தொடர்ந்து சமந்தா நடிக்க கே ஜே ஆர் நிறுவனம் தயாரிப்பில் ஒரு படத்தினை இயக்கவிருந்தார் இயக்குனர் தாஸ் துரைசாமி.
இப்படம் ’வாலிபால்’ (volleyBall) விளையாட்டை மையப்படுத்தி எடுக்கவிருப்பதாக இருந்தது.
இந்நிலையில், சமந்தா இப்படத்தில் இருந்து விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த சில வருடங்களாக விளையாட்டை மையப்படுத்தியே படங்கள் வந்து கொண்டிருப்பதால், சமந்தா ரிஸ்க் எடுக்க தயங்குகிறாராம்.
அடுத்த ஹீரோயினுக்கான தேடுதல் வேட்டையில் களமிறங்கியுள்ளதாம் கே ஜே ஆர் நிறுவனம்.
Facebook Comments