ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்க உருவாகி வருகிறது ‘இந்தியன் 2’.. கமல்ஹாசனின் கட்சிப் பணிகளால் தொடர்ந்து தடைபட்டுக் கொண்டிருக்கிறது. இதனால் கடுப்பாகி போன இயக்குனர் ஷங்கர், அடுத்த படத்தை ஆரம்பிக்கலாம் என்ற மனநிலைக்கு வந்துவிட்டாராம்.
நடிகர் விஜய் மற்றும் விக்ரமிடம் ஒரு கதையை ஷங்கர் கூற இருவரும் கதையில் நடிக்க ஒப்புக் கொண்டுவிட்டார்களாம்.
இதனைத் தொடர்ந்து, இப்படத்திற்கு பைனான்ஸ் உதவி செய்ய முன்வந்திருக்கிறது ஜியோ நிறுவனம். முகேஷ் அம்பானி தான் இப்படத்திற்கு நிதி அளிக்கவிருக்கிறாராம்.
விரைவில் இப்படத்தின் வேலைகள் ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படம் விஜய் – விக்ரம் ரசிகர்களுக்கு ஒரு மாஸான ட்ரீட்டாக இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
Facebook Comments