
தமிழகத்தில் இன்று புதிதாக 66 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறும் போது,
கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 94 பேர் நலம்பெற்று இன்று வீடு திரும்பினர்.
இதுவரை தமிழகத்தில் 960 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து நலம் பெற்றுள்ளனர்.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1821 -ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா பாதிப்பால் இதுவரை தமிழகத்தில் 23 பேர் உயிரிழப்பு ; இன்று ஒருவர் உயிரிழப்பு.
சென்னையில் இன்று மட்டும் புதிதாக 43 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.’ என்று கூறினார்.

Facebook Comments





