Spotlightசினிமா

தந்தையின் பிரேதம் முன் திருமணம் செய்து கொண்ட வாலிபர்!

திண்டிவனம்: அலெக்சாண்டர் என்பவர் மயில பகுதியில் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். அதே பள்ளியில் ஆசிரியையாகப் பணிபுரிந்து வரும் ஜெகதீஸ்வர் என்ற பெண்ணை காதலித்துள்ளார்.

இந்த காதலுக்கு இருவீட்டாரும் சம்மதம் தெரிவிக்க, அடுத்தமாதம் 2 ஆம் தேதி திருமணம் செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் திடீரென்று நேற்று அலக்சாண்டரின் தந்தை தெய்வமணி உடல்நலக் குறைவார் இறந்துள்ளார்.

தனது தந்தை மேல் மிகுந்த பாசம் வைத்திருந்த அலக்சாண்டர் அவரது ஆசிர்வாத்தோடுதான் தன் திருமணம் நடக்க வேண்டுமென்று நினைத்திருந்தார். ஆனால் எதிர்பாராத இந்த சம்பவத்தால் மனமுடைந்த அவர் தனது உறவினர்களையும் ஜெகதீஸ்வரியின் வீட்டாரையும் அழைத்து உடனடியாக திருமணம் செய்துகொள்ள வேண்டும் எனக் கூற, அதற்கு அனைவரும் சம்மதம் தெரிவிக்க தெய்வமணியின் பிரேதம் முன் ஜெகதீஸ்வரிக்குத் தாலி கட்டியுள்ளார் அலக்சாண்டர்.

Facebook Comments

Related Articles

Back to top button