பாடலாசிரியர் வைரமுத்து மீது கடந்த சில நாட்களாக பாடகி சின்மயி பாலியல் குற்றச்சாட்டு வைத்து வருகிறார்.
தொடர்ந்து தனக்கு பெண்கள் அனுப்பும் குற்றச்சாட்டு பதிவுகளை டுவிட்டரில் ஷேர் செய்த வண்ணம் உள்ளார் சின்மயி. மேலும், பாடகி சின்மயிக்கு பல தரப்பில் இருந்து ஆதரவு வண்ணம் வந்து கொண்டு தான் இருக்கிறது. இந்நிலையில்
சற்று முன்பு, வைரமுத்து தன்னுடைய டுவிட்டரில் இதுகுறித்து ஒரு அதிரடி கருத்து தெரிவித்துள்ளார்.
“அறியப்பட்டவர்கள் மீது அவதூறு பரப்பும் அநாகரிகம் நாடெங்கும் இப்போது நாகரிகமாகி வருகிறது. அண்மைக்காலமாக நான் தொடர்ச்சியாக அவமானப்படுத்தப்பட்டு வருகிறேன்; அவற்றுள் இதுவும் ஒன்று. உண்மைக்குப் புறம்பான எதையும் நான் பொருட்படுத்துவதில்லை; உண்மையைக் காலம் சொல்லும், ” என்று வைரமுத்து தெரிவித்துள்ளார்.
Facebook Comments