தமிழ் சினிமாவின் நட்சத்திர நாயகி ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில், இயக்குனர் ரதீந்திரன் ஆர் பிரசாத் இயக்கத்தில் உருவாகிறது ஸ்டோன் பென்ச் பிலிம்ஸ் நிறுவனத்தின் ‘படைப்பு எண் : 4’.
இன்று பூஜையுடன் நீலகிரியில் படப்பிடிப்புடன் துவங்கியது. கார்த்திகேயன் சந்தானம் தயாரிப்பில், முன்னணி இயக்குனர் கார்த்திக் சுப்பாராஜ் வழங்கும் இந்த மர்மம்-திகில்-திரில்லர் படத்திற்கு பிரித்வி சந்திரசேகர் இசை அமைக்கிறார்.
கல் ராமன், எஸ் சோமசேகர் மற்றும் கல்யாண் சுப்பிரமணியன் இப்படத்திற்கு இணை தயாரிப்பாளர்களாக பொறுப்பேற்று இருக்கிறார்கள். இத்தாலிய ஒளிப்பதிவாளர் ரொபர்டோ ஸஸ்ஸாரா ஒளிப்பதிவு செய்ய, ஆனந்த் ஜெரால்டின் படத்தொகுப்பை கவனிக்கிறார். கலை மோகன் வசமும், ஆடை வடிவமைப்பு ஜெயலஷ்மி சுந்தரேசன் வசமும், ஒலி வடிவமைப்பு தாமஸ் குரியன்.
படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று, அடுத்த ஆண்டு துவக்கத்திலேயே படத்தை திரைக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டுள்ளது.