
பசுமை மரங்கள் திட்டத்தின் கீழ் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், மாணவ, மாணவியர்களிடையே பேசிய விவேக், ‘ நான் இப்போது பிகில் பட ஷுட்டிங்கிற்காக செல்கிறேன். (அப்போது மாணவ, மாணவியர்கள் அதிக சத்தத்தோடு குரல் எழுப்பினர்).
பிகில் என்ற சொல்லை கேட்டதும் எவ்வளவு எழுச்சி கொடுத்தீர்கள். அதே எழுச்சியை நம் தாய் மண்ணிற்காக, இந்த மண்ணிற்காக, இந்த மரங்களுக்காக, இந்த குளங்களுக்காக, இந்த ஏரிகளுக்காக, மாணவர்கள் அதே எழுச்சியை கொடுக்க வேண்டும்.’ என்று கூறினார்.
மாணவர்களும் தங்கள் எழுச்சி தமிழகத்தின் நலனுக்காக நிச்சயம் இருக்கும் என்று உறுதியளித்தார்கள்.
பிகில் என்று சொன்னதும் கூட்டத்தின் மகிழ்ச்சி பாருங்கள் pic.twitter.com/9Mg5dkHnjP
— Vivekh actor (@Actor_Vivek) July 30, 2019
Facebook Comments





