Spotlightதமிழ்நாடு

சரவணா ஸ்டோரில் பட்டாக் கத்தியுடன் திமுக பிரபலம்… வழக்கம் போல் கை ஒடிந்தது!

நெல்லை தாழையுத்தைச் சேர்ந்த திமுக பிரமுகர் முருகானந்தம் என்பவர், சில தினங்களுக்கு முன் பொருள் ஒன்றை சரவணா ஸ்டோரில் திருடிச் சென்றுள்ளார்.

இந்த சிசிடிவி வீடியோ காட்சி இணையத்தில் வெளியானது. இதனால், ஆத்திரம் அடைந்த முருகானந்தம், தனது ஆதரவாளர்கள் சிலரோடு சேர்ந்து சரவணா ஸ்டோர்ஸ்க்குச் சென்று பயங்கர ஆயுதங்களைக் கொண்டு தாக்கினர்.

இதனால், பொதுமக்கள் நாலாபுறமும் அலறியடித்து ஓடினர். இந்த காட்சியை பொதுமக்கள் பலர் தங்களது கைபேசியில் எடுத்துள்ளனர். அந்த வீடியோவும் இணையத்தில் பெரும் வைரலானது.

இதனைத் தொடர்ந்து முருகானந்தம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பாத்ரூமில் வழுக்கி விழுந்து கை முறிவு ஏற்பட்டு தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் முருகானந்தம்.

சில நாட்களாக, குற்றம் புரிந்தவர்கள் காவல் நிலையம் சென்றாலே பாத்ரூமில் வழுக்கி விழுவதும் அவர்கள் கை முறிவதும் வழக்கமான ஒரு செயலாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Facebook Comments

Related Articles

Back to top button