இலங்கையில் போர் நடைபெற்றபோது, அப்போது தமிழகத்தில் ஆட்சியில் இருந்த திமுக தமிழ் ஈழ மக்களை காக்க தவறிவிட்டது எனக் கூறி ஆளுங்கட்சி சார்பில் திமுக-வுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டங்கள் தமிழகம் முழுவதும் நடைபெற்றது.
இதில், பல அமைச்சர்களின் பேச்சுக்கள் வரம்புகள் மீறப்பட்டு, தெளிவான பேச்சுக்கள் இல்லாமல் இருந்ததை சமூக வலைதளங்களில் வந்த வீடியோ காட்சிகள் வெளிச்சம் போட்டு காட்டி விட்டன.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பேசியுள்ள திமுக தலைவர் மு க ஸ்டாலின், ‘
ஊழலில் கொழுத்துக் கொண்டிருக்கும் அதிமுக ஆட்சியாளர்கள் தி.மு.க வுக்கு எதிராக போராட்டம் நடத்தி நகைச்சுவை செய்து கொண்டிருக்கிறார்கள்!
ராஜபக்சேவை அண்மையில் டெல்லிக்கு அழைத்து வந்து பிரதமரைச் சந்திக்க வைத்ததே உங்கள் எஜமானர் கட்சி தானே. அவர்களை எதிர்க்க உங்களுக்கு தைரியம் இருக்கிறதா?
வரலாற்றில் எதிர்க்கட்சியை பார்த்து அஞ்சி நடுங்கி போராட்டம் நடத்தும் ஒரே கட்சி துரோகமும், ஊழலும் கொண்ட அதிமுக மட்டுமே!
இதுவரை ஒரு குற்றத்தை எங்கள் மீது சுமத்தி உங்களால் நிரூபிக்க முடிந்ததா?
இனியும், எங்கள் மீது குற்றம் சுமத்த துணிவிருந்தால் வழக்கு போடுங்கள்!” என்று கூறியுள்ளார்.