இந்தியா முழுவதும் கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்த வைரஸை ஒழிப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து போராடி வருகின்றன.
பல நட்சத்திரங்கள் நிவாரண தொகையை வழங்கி வருகின்றனர். தெலுங்கு நட்சத்திரங்கள் பலரும் நிவாரண தொகையை வழங்கி வரும் வேளையில், நடிகர் மகேஷ் பாபு ஒரு கோடி ருபாய் கொடுத்துள்ளார்.
பவர் ஸ்டார் பவன் கல்யாண் இரண்டு கோடி ரூபாய் , ராம் சரண் 70 லட்சம் கொடுத்துள்ளார்.
இந்நிலையில் பாகுபலி நடிகர் பிரபாஸ் அவர்கள் 4 கோடி ரூபாயை தருவதாக அறிவித்துள்ளார்.
பிரதமரின் நிவாரண நிதிக்கு 3 கோடி ரூபாயும், ஆந்திர முதல்வர் நிவாரண நிதிக்கு 50 லட்சம் ரூபாயும், தெலுங்கானா முதலமைச்சர் நிவாரண நிதிக்கு 50 லட்சம் ரூபாயும் வழங்குவதாக அறிவித்துள்ளார்.
ஆக மொத்தம் 4 கோடி ரூபாயை பிரபாஸ் கொடுத்துள்ளார்.
Facebook Comments