தமிழக அரசு இன்னும் படுவேகமாக செயல்பட்டு கொரோனாவிலிருந்து மக்களை காக்க வேண்டும் என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் கூறியிருந்தார்.
இந்நிலையில் இதற்கு விளக்கம் அளித்த தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி, ”அரசு எதுவும் செய்யவில்லை என்பது போல் சித்தரித்து, பரிந்துரை செய்கிறேன் என்ற பெயரில், அரசு மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்துவது எதிர்க்கட்சித் தலைவரின் சந்தர்ப்பவாத அரசியலையே காண்பிக்கிறது.” என்று கூறியிருந்தார்.
இதற்கு பதில் அளித்த முக ஸ்டாலின், ‘கேட்கவேண்டிய சந்தர்ப்பத்தில்தான் கேட்கிறேன்; சந்தர்ப்பவாதம் பற்றி முதல்வர் பேசலாமா..?
எதிர்க்கட்சி தலைவர் என்ற அடிப்படையில் தட்டிக்கேட்டால் சந்தர்ப்பவாதம் என்பதா..?
கொரோனா பரவ தொடங்கியபோது பல முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க திமுக வலியுறுத்தியது
அரசாங்கம் ஒழுங்காக முறையாக மக்களுக்கு செயல்படாவிடில் அரசாங்கத்தை திமுக செயல்பட வைக்கும்’ என்று தமிழக முதல்வருக்கு முக ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.