தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நேற்று ஆரி, அனிதா, சனம் உள்ளிட்டோர் நள்ளிரவில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தபோது அங்கு வந்த பாலாஜி நல்லவர் போல ஆரியிடம் இரு தினங்களுக்கு முன்பு நடந்த கேப்டன் டாஸ்க் குறித்து பேசினார்.
அவராகத்தானே பேசுகிறார் என்று ஆரி தனது கருத்துக்களை பகிர பாலாஜியின் அன்பான பேச்சு மறுநாள் நாமினேஷன் நடைபெறும் போது ஆரிக்கு எதிராக திரும்பியது. இதில் ஆரம்பித்த பஞ்சாயத்து பின்னர் இருவரும் நேரடியாக மோதிக்கொள்ளும் அளவுக்கு சென்றது.
பின்னர் மொத்த போட்டியாளர்களும் ஆரிக்கு எதிராக திரும்பியும் கூட அவர் அதை எளிதாக கடந்து வந்து விட்டார். பின்னர் ஆரி மற்றும் பாலாவிற்கு இடையே வார்த்தை மோதல் முற்றியது. ஆரியிடம் காலை எட்டி பேசிய பாலா பின்னர் அவரது காலில் விழுந்து மன்னிப்பு கோரியும் ஆரி மன்னிக்கவில்லை.
இதையடுத்து இந்தியளவில் ஆரி அர்ஜுனன் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறார். அவருக்கு ரசிகர்கள் ஆதரவு வெகுவாக அதிகரித்து இருப்பதையே இது சுட்டிக் காட்டுவதாக அமைந்துள்ளது.