Spotlightதமிழ்நாடு

மீண்டும் நிரம்பிய மேட்டூர் அணை …

மேட்டூர் அணை இந்த ஆண்டில் 4வது முறையாக முழு கொள்ளளவை எட்டியுள்ளது.

கர்நாடகத்தின் நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பொழிந்து வருவதால் கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பின. அங்கிருந்து உபரிநீர் விநாடிக்கு 2 லட்சம் கனஅடி வரை திறக்கப்பட்ட நிலையில், ஏற்கெனவே மேட்டூர் அணை முழுக்கொள்ளளவை 3 முறை எட்டியுள்ளது. இந்நிலையில், மேட்டூர் அணை இன்று காலை 4ஆவது முறையாக முழுக்கொள்ளவை எட்டியுள்ளது.

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து இன்று காலை நிலவரப்படி விநாடிக்கு 17 ஆயிரத்து 500 கன அடியாக இருந்தது. அணையில் இருந்து விநாடிக்கு 17 ஆயிரத்து 800 கனஅடி வீதம் நீர்திறக்கப்படுகிறது. அணையின் நீர் மட்டம் 120.04 அடியாகவும், நீர் இருப்பு 93.53 டிஎம்சியாகவும் உள்ளது.

Facebook Comments

Related Articles

Back to top button