Spotlightசினிமா

ஆந்திரா, ஸ்ரீலங்காவில் அலப்பறை காட்டும் ‘பிகில்’ புள்ளிங்கோ!

ளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ளது ‘பிகில்’. வரும் வெள்ளியன்று மிகவும் பிரம்மாண்ட வெளியீடாக திரைக்கு வர இருக்கிறது.

இந்நிலையில், தளபதி ரசிகர்கள் பிகில் திரைப்படத்தை பல விதமாக கொண்டாட தயாராகி வருகின்றனர். தமிழகம் முழுவதும், பேனர் இல்லாமல் இந்த பிகில் தினத்தை கொண்டாட முடிவு செய்துள்ளனர் தளபதி ரசிகர்கள்.

தமிழகம், தவிர பிற மாநிலங்களிலும் பிகில் கொண்டாட்டத்தை கொண்டாடி வருகின்றனர் விஜய் ரசிகர்கள். ஆந்திராவில் சுமார் 50 அடி உயரத்தில் மிகப்பெரும் கட் – அவுட் ஒன்றும் ஸ்ரீலங்காவில் மிகப்பெரும் கட் அவுட் ஒன்றும் வைத்து கொண்டாடி வருகின்றனர்.

பிகில் படம் வெளியாகும் அன்று ஒரு பெரிய திருவிழா போல் கொண்டாட ரசிகர்கள் தயாராகி வருகின்றனர். பல இடங்களில் பல நலத்திட்ட உதவிகளையும் செய்து வருகின்றனர் ரசிகர்கள்.

Facebook Comments

Related Articles

Back to top button