
நடிகர் கார்த்தி நடிப்பில் ‘கடைக்குட்டி சிங்கம்’ படம் உருவாகி வருகிறது. இயக்குனர் பாண்டிராஜ் இயக்கி வரும் இந்த படத்தை நடிகர் சூர்யா தனது 2D என்டேர்டைன்மெண்ட் நிறுவனம் சார்பில் தயாரித்துள்ளார்.
முன்னதாக இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில் இந்த படத்தின் போஸ்ட் ப்ரொடக்சன் தற்போது நடைபெற்று வருகிறது.
இந்த படத்தை தொடர்ந்து கார்த்தி, அறிமுக இயக்குனரான ரஜத் ரவிசங்கர் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படம் கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் 17வது படமாகும். தீரன் படத்திற்கு பிறகு ராகுல் ப்ரீத் சிங் இரண்டாவது முறையாக கார்த்திக்குடன் இணைந்து நடிக்கும் இந்த படத்தில் கார்த்திக், ரம்யா கிருஷ்ணன், பிரகாஷ் ராஜ், ரேணுகா, அம்ருதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்த படத்தை ரிலையன்ஸ் என்டர்டெய்ன்மெண்ட் மற்றும் பிரின்ஸ் பிக்ச்சர்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்து வருகிறது.
கடந்த மாதம் ஏப்ரல் 28இல் தொடங்கிய இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. சென்னையை தொடர்ந்து மும்பை, ஹைதராபாத் மற்றும் ஐரோப்பாவிலும் படப்பிடிப்பை நிகழ்த்த உள்ளனர். இந்நிலையில் இந்த படத்தின் தலைப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி இந்த படத்திற்கு ‘தேவ்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த பெயர் தனது அண்ணன் மற்றும் நடிகரான சூர்யாவின் மகன் பெயர்.
ஒரே சமயத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் உருவாகி வரும் இந்த படத்திற்கு தெலுங்கிலும் அதே தலைப்பில் வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்திற்கு பிறகு சமீபத்தில் இரும்புத்திரை இயக்குனரான இயக்குனர் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிக்க உள்ளார்.