கடந்த அக்டோபர் 2018 ஆம் ஆண்டு அருண் என்பவர் ஸ்ரீஜா என்னும் திருநங்கையை கோவிலில் வைத்து திருமணம் செய்துக்கொண்டார். ஆனால், இவர்களுக்கு திருமண சான்றிதழ் வழங்க மறுக்கப்பட்டது.
இதனால் சென்னை உயர் நீதிமன்றத்தை நாடிய இவர்களுக்கு ஒருவழியாக சில தினங்களுக்கு முன் திருமண சான்றிதழ் வழங்கப்பட்டது. இதன் மூலம் அருண்- ஸ்ரீஜா தமிழகத்தின் முதல் அதிகாரப்பூர்வ ஆண் – திருநங்கை தம்பதியினராகி உள்ளனர்.
இந்நிலையில், இவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து நடிகை கஸ்தூரி ”அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்? தமிழகத்தின் முதல் அதிகாரப்பூர்வ ஆண்-திருநங்கை தம்பதி அருண்- ஸ்ரீஜா. புரட்சி தொடரட்டும். அன்பு மலரட்டும். வாழ்த்துக்கள்” என ஒரு பதிவை பதிவிட்டுள்ளார்.
கஸ்தூரியின் பதிவை கண்ட நபர் ஒருவர், மேட்டர் மட்டும்தான் பண்ண முடியும், குழந்தைக்கு எங்கே போவான். இதுல பாராட்டு வேற என மோசமாக க்மெண்ட் செய்திருந்தார். இதனை கண்ட கஸ்தூரி இப்படி பேசுரவன் யாருனு பார்த்தா… ஓ.. ஓ.. அப்ப சரி அப்ப சரி… என பதில் அளித்துள்ளார்.
அப்படிப்பட்ட கமெண்ட்டை பதிவிட்ட அந்த நபர் அஜித் ரசிகர் போலும். அந்த நபரின் ப்ரொஃபைல் போட்டோவில் அஜித் புகைப்படம் வைக்கப்பட்டுள்ளது. அந்த நபரின் கமெண்ட்டை பலர் திட்டி வருகின்றனர்.