குடியரசுத் தலைவர் நீட்டிற்கு விலக்கு அளிக்கும் மசோதாவை திருப்பி அனுப்பி 21 மாதங்கள் ஆகி விட்ட நிலையில், அதை அதிமுக அரசு மூடி மறைத்துவிட்டதாக தமிழக எதிர்கட்சி தலைவர் மு க ஸ்டாலின் கடுமையாக தாக்கியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘NEET விலக்கு மசோதாக்களை குடியரசுத் தலைவர் திருப்பி அனுப்பிவிட்டதாக செப்’ 2017 கடிதத்தில் மத்திய அரசு தெரிவித்த செய்தியை 21 மாதங்களாக மறைத்திருக்கிறது அதிமுக அரசு.
தாமதத்தால் மசோதாக்களை மீண்டும் அனுப்பும் வாய்ப்பையும் இழந்திருக்கிறோம். இந்தப் பச்சை துரோகத்துக்கு யார் பொறுப்பு?’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
Facebook Comments