அறிமுக இயக்குனர் செல்வகண்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம்தான் ‘ நெடுநல்வாடை’. இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்றி மாலை சென்னையில் நடைபெற்றது.
இப்படத்திற்கு தயாரித்தது செல்வகண்ணனின் உடன் பயணித்த 50 நண்பர்கள் தான். ஒவ்வொருவரும் தங்களால் முடிந்த பணத்தை கொடுத்த, செல்வகண்ணன் வெற்றி பெற வேண்டும் என்று எண்ணிய 50 பேரும் தயாரிப்பாளராகியுள்ளனர்.
இதில் பேசிய இயக்குனர் செல்வகண்ணன், ‘ வாழ்க்கையில் ஒரு இலக்கை மனதில் வைத்து, அதில் உறுதியாக இருந்து, அதில் பயணிக்க செய்தால் வெற்றி நமது கை மீது வந்து நிற்கும்.
இப்படத்தில் எனது நண்பர்கள் அனைவரும் பணம் திரும்ப வந்துவிடும் என்ற எண்ணத்தில் செலவு செய்யவில்லை, செல்வகண்ணன் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் தான் செலவு செய்திருக்கிறார்கள்.
அந்த எண்ணத்திற்காக நிச்சயம் நான் எனது வெற்றியை நிலைநாட்டுவேன்.’ என்று கூறினார்.