Spotlightசினிமா

ET படக்குழுவினருக்கு தங்கக் காசு பரிசளித்த சூர்யா!!

ன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் படம் “எதற்கும் துணிந்தவன்” (ET). படத்தின் நாயகியாக ப்ரியங்கா மோகன் நடித்துள்ளார்

மேலும், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, இளவரசு, சுப்பு பஞ்சு, திவ்யா துரைசாமி, ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்து வருகின்றனர். ஒளிப்பதிவாளராக ரத்னவேலு, இசையமைப்பாளராக இமான் ஆகியோர் பணிபுரிகின்றனர்.

கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கிய படப்பிடிப்பு காரைக்குடி, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ச்சியாக நடந்துவந்தது. சில தினங்களுக்கு முன்பு நிறைவடைந்தது.

இந்நிலையில் சூர்யா தன்னுடன் பணிபுரிந்த இயக்குநர் பாண்டிராஜ் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் தங்கக் காசுகள் உள்ளிட்ட பரிசுகளை வழங்கியிருக்கிறார். தனது படங்களுக்கு தொடர்ச்சியாக இதை வழங்குவதை வழக்கமாக வைத்து வருகிறார் சூர்யா என்பதும் குறிப்பிடத்தக்கது.

பொங்கல் பண்டிகைக்குப் படத்தைத் திரைக்குக் கொண்டுவரப் படக்குழு திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

Facebook Comments

Related Articles

Back to top button