ரஜினி நடிக்க கார்த்திக் சுப்புராஜ் இயக்க பொங்கல் விருந்தாக வெளிவந்தது பேட்ட. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் மிகப்பெரும் பொருட் செலவில் தயாரித்திருந்தது. இசையமைத்திருந்தார் அனிருத்.
பலத்த எதிர்பார்ப்பிற்கிடையே வெளியான இப்படம் ரசிகர்களை மிகவும் பூர்த்தி செய்யும் படமாக அமைந்தது. ரசிகர்கள் மிகவும் கொண்டாட்டமாக இப்படத்தை கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில், இப்படத்தின் 50 வது நாளான நேற்று பல திரையரங்குகளில் விழா எடுக்கப்பட்டு கொண்டாடப்பட்டது. சென்னையில் உள்ள ஆல்பர்ட் திரையரங்கிலும் இத்திருவிழா கொண்டாடப்பட்டது.
இதில், லதா ரஜினிகாந்த், இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கலந்து கொண்டு ஆரவாரப்படுத்தினர்.
Facebook Comments