Spotlightதமிழ்நாடு

செயல்படாத தமிழக அரசை சாடிய ரஜினிகாந்த்!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் மாசுபடுவதாகவும், நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறி அந்த ஆலையை மூடவேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று 48வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்து வரும் போராட்டம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டரில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், “ஸ்டெர்லைட் தொழிற்சாலையால் மக்கள் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டிருக்கிறோம் என்று 47 நாட்களாக அவதிப்பட்டு போராடிக்கொண்டிருக்கும் போது, தொழிற்சாலை நடத்த அனுமதி கொடுத்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பது புரியாத புதிராக உள்ளது” என்று பதிவிட்டுள்ளார்.

ரஜினி முதன்முறையாக தமிழக அரசினை கண்டித்து நேரடியாக இந்த அறிக்கையினை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Facebook Comments

Related Articles

Back to top button