விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சியாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருவது ‘குக் வித் கோமாளி 2’ தான். இதற்கான ரசிகர்கள் நாளுக்கு நாள் லட்சக்கணக்கில் அதிகரிக்கின்றனர்.
தொடர்ந்து அடுத்தடுத்த கட்டங்களை கடந்து பைனலுக்கு தயாராகி வருகிறது இந்நிகழ்ச்சி. இந்நிலையில், அஸ்வினுக்கும் பவித்ராவிற்கும் இடையே எலிமினேஷன் சுற்று சென்றது.
இதில், பவித்ரா வெளியேற்றப்பட்டார். பவித்ரா பேசும் போது, இந்த நிகழ்ச்சி மட்டுமே என்னை புகழின் உச்சிக்கு செல்ல வைத்தது. அதுமட்டுமல்லாமல் புகழால் மட்டுமேஇந்த உயரத்தை அடைந்தேன்.
அதை ஒருநாளும் மறக்க மாட்டேன். என்று கூறினார். பின் புகழ் பேசும் போது , ‘அடுத்தவரை புகழ்ந்து பேசுவது தற்போது யாரும் அதை கூற மாட்டார்கள். ஆனால், பவி கூறியது என்னை மகிழ்ச்சியாக்கியது.’ என்று கூறி கண்கலங்கினார்.
புகழை நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள் என்று கூறி அந்த செட்டில் இருந்து வெளியேறினார் பவித்ரா.