காய்கறியை ஏற்றிச் சென்ற வாகனத்தை மார்கெட்டிற்கு செல்ல அனுமதிக்காமல் திருவள்ளூர் ஆய்வாளர் மற்றும் DSP இருவரும் மறுத்து விட்டு, காய்கறி ஏற்றி வந்த வண்டியையும் பறிமுதல் செய்து வைத்து கொண்டனர்.
விவசாயி செய்வதறியாது உடனே அந்த காய்கறிகள்அனைத்தையும் ரோட்டில் வீசி விட்டு காய்கறிகள் நாசமா போனது போல் என் வாழ்க்கையும் நாசமா போகட்டும் என்று சொல்லி விட்டு விவசாயி வீட்டுக்கு சென்றுவிட்டார்.
இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவியது. இதனைக் கண்ட திருவள்ளூர் S P அரவிந்த் அவர்கள் விவசாயி வீட்டுக்கு நேரில் சென்று நடந்ததற்கு மன்னிப்பு கோரி இழப்பீடும் வழங்கினனர். இதனை அப்பகுதியில் இருந்த அனைத்து விவசாயிகளும் பாராட்டினார்கள்.
Facebook Comments