பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கடந்த வார ரேஷ்மா எலிமினேட் ஆன நிலையில், இந்த வாரம் அடுத்த எலிமினேஷனுக்கான நாமினேஷன் சென்று கொண்டிருக்கிறது.
இந்நிலையில், நேற்று பிக் பாஸ் வீட்டில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்டிருக்கிறார் சரவணன்.
கடந்த சில வாரங்களுக்கு முன் கமல்ஹாசனோடு பேசிக் கொண்டிருந்த சரவணன், சிறு வயதில் தான் பெண்களை இடிப்பதெற்கென்றே பேருந்துகளில் பயணம் செய்திருப்பதாக கூறினார்.
அப்போது, அதை சிரித்துக் கொண்டே ரசிகர்கள் ரசித்தாலும், அதன் பிறகு இந்த பிரச்சனை பூதாகரமாக வெடித்தது. பல இடங்களில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பிய வண்ணம் இருந்தன.
இதற்கு சரவணன் மன்னிப்பு கேட்டுக் கொண்டாலும், அதை எங்களால் ஏற்க முடியாது என்று கூறி சரவணனை பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறும்படி கூறினார் பிக் பாஸ்.
Facebook Comments