Spotlightஇந்தியா

இலங்கையில் இன்று முதல் முகம் மூடி ஆடை அணிவது தடை!

நாட்டிலுள்ள பாதுகாப்பு நிலைமைகளைக் கருத்தில் கொண்டு இன்று முதல் உடன் அமுலுக்கு வரும் வகையில் சகல எல்லோரும் தமது அடையாளத்தை வெளிப்படுத்த முடியாதவாறு முகத்தை மூடும் விதத்தில் ஆடையோ அல்லது வேறு பொருட்களையோ அணிவதை தடை செய்வதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.

ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில் சகல மக்களினதும் பாதுகாப்பு காரணங்களைக் கருத்தில் கொண்டு, இந்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முஸ்லிம் பெண்கள் அணியும் புர்காவும் நாளை முதல் இந்த சட்டத்தின்படி தடை செய்யப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Facebook Comments

Related Articles

Back to top button