Spotlightசினிமா

கிரேஸி மோகனுக்கு அஜித் கொடுத்த மறக்க முடியாத பரிசு!

மிழ் சினிமாவை ஆட்டிப்படைத்த வசனகார்த்தாவில் மிகவும் முக்கியமானவர் நாடக நடிகர் கிரேஸி மோகன். யாரும் எதிர்பார்க்கா வண்ணம், நேற்று மாரடைப்பால் உயிரிழந்தார். இதனால் திரையுலகமே அதிர்ச்சியுற்றது.

இறப்பதற்கு சில தினங்களுக்கு முன்பு கிரேசி மோகன் அளித்த பேட்டி ஒன்றில் நடிகர் அஜித் பற்றி நெகிழ்ச்சியாக பேசியுள்ளார். “நான் வெளியில் சென்றால் பலரும் என்னிடம் ஒரு குறிப்பிட்ட நடிகர் நம்பரை தான் கேட்கிறார்கள். அது ரஜினியோ, கமலோ அல்ல… அஜித் பற்றித்தான் கேட்கிறார்கள். அவருக்கு இவ்வளவு பெரிய ரசிகர் கூட்டம் இருப்பதாய் பார்த்து வியந்தேன். அஜித்தின் வீட்டுக்கு நான் ஒருமுறை சென்றிருந்தேன். அப்போது அவர் வீட்டில் பெரிய சாய்பாபா போட்டோ இருப்பதை பார்த்து வியந்தேன்.”

“நான் சாய் பக்தன் என்பதால் அதுபோல ஒரு புகைப்படம் கிடைக்குமா என அஜித்திடம் கேட்டேன். சில நாட்கள் கழித்து அதுபோல ஒன்று என் வீடு தேடி வந்தது. நான் எதிர்பார்க்கவே இல்லை” என கிரேசி மோகன் நெகிழ்ச்சியாக பேசியுள்ளார்.

Facebook Comments

Related Articles

Back to top button