Spotlightதமிழ்நாடு

தூத்துக்குடியில் பைக் விபத்து; வாலிபர் பலி!

தூத்துக்குடி மாவட்டம் மாரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் அருள்ராஜ் (28). இவருக்கு திருமணமாகி 4 குழந்தைகள் உள்ளனர்.

இவர், தூத்துக்குடி துறைமுகத்தில் கூலி வேலை செய்து வருகிறார். நேற்றிரவு பணிமுடிந்து இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்திருக்கிறார் அருள்.

பழையகாயல் அருகேயுள்ள கோவங்காடு விலக்கு அருகே வந்து கொண்டிருக்கும் போது, சாலையில் இருந்த மாட்டின் மீது பைக் மோதி, சம்பவ இடத்திலேயே அருள் உயிரிழந்திருக்கிறார்.

பிரேத பரிசோதனைக்காக அருளின் உடல் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

போதிய வெளிச்சமின்மை, இரவு நேரங்களில் சாலைகளில் கிடக்கும் மாடுகளால் அடிக்கடி அங்கு விபத்துகள் நடைபெற்ற வண்ணம் உள்ளன. அதிகாரிகள் விரைந்து இதற்கு ஒரு தீர்வு எடுக்கம்படி அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

அருளின் மறைவினால் மாரமங்கலம் கிராமமே சோகத்தில் மூழ்கி உள்ளது.

Facebook Comments

Related Articles

Back to top button