ஆசிய தடகள போட்டியில் தங்க பதக்கத்தை வென்ற தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்துக்கு நடிகர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி 5 லட்சம் ரூபாய் காசோலையை தனது ரசிகர் மன்றம் சார்பில் வழங்கியுள்ளார்.
இந்த காசோலையை கோமதி வசிக்கும் திருச்சியை சேர்ந்த முடிகண்டம் கிராமத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ரசிகர் தலைமை மன்ற செயலாளர் குமரன், மற்றும் சில முக்கிய மாவட்ட தலைவர்கள் ஆகியோர் நேரில் சென்று காசோலையை வழங்கியுள்ளனர்
மேலும் இயக்குனர் ஜனநாதன் இயக்கத்தில் லாபம் படப்பிடிப்பில் இருந்த விஜய் சேதுபதி தொலைபேசி மூலம் தனது பாராட்டுகளை கோமதிக்கு தெரிவித்துள்ளார்.
Facebook Comments