Spotlightசினிமா

’பிகில்’ கதை என்னுடையது; கொடிபிடித்த மேலும் ஒரு இயக்குனர்!

ட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்க தீபாவளி விருந்தாக திரைக்கு வர இருக்கும் படம் தான் ‘பிகில்’.

அட்லீ இயக்கம் என்றாலே, அவர் இயக்கும் கதை தன்னுடையது தான் என்று கொடி பிடித்து உரிமை கொண்டாடுவார்கள் பலர். அந்த உரிமையையும் நியாயமாக நின்று வென்று கொண்டு தான் சென்றிருக்கிறார்கள்.

அதேபோல் தான் இம்முறையும், பிகில் கதை தன்னுடையது என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறார் உதவி இயக்குனர் செல்வா. அந்த வழக்கின் மீது தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.

இதைத் தொடர்ந்து இயக்குனரும் தயாரிப்பாளருமான மீரான், பிகில் க்தை தன்னுடையது என்று கொடி பிடித்துள்ளார்.

இந்த கதையை 2015ல் WGA என்று அழைக்கப்படும் ரைட்டர்ஸ் கில்ட் ஆஃப் அமெரிக்காவில் முறைப்படி பதிவு செய்துள்ளாராம் மீரான்.

இந்த கதையை தான் பிகில் என்ற டைட்டிலில் அட்லீ விஜய்யை வைத்து இயக்கியுள்ளார் என்கிறார் மீரான்.

மேலும், இதுகுறித்து தயாரிப்பாளர் சங்கத்தில் முறைப்படி புகாரும் அளித்துள்ளார் மீரான். இதனால், படம் வெளிவருவதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது.

Facebook Comments

Related Articles

Back to top button