கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்க உருவாகியுள்ளது ‘பேட்ட’. இப்படத்தின் பாடல்கள் நேற்று வெளியிடப்பட்டது.
தனுஷின் ஆஸ்தான இசையமைப்பாளராக இருந்தவர் அனிருத். அதன் பிறகு அவர்களுக்கு இடையே மனஸ்தாபம் ஏற்பட்டு பிரிந்துவிட்டனர். அனிருத்தை பிரிந்த பிறகு தனுஷும் அனிருத்தும் ஒன்றாக இணையும் வாய்ப்பு கைகூடவில்லை.
தனுஷ், அனிருத் மீண்டும் கூட்டணி சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்பதே அவர்களின் ரசிகர்களின் விருப்பமாக இருந்து வருகிறது.
இந்நிலையில் ’பேட்ட’ படத்தில் ரஜினிக்காக தனுஷும், அனிருத்தும் ஒன்று சேர்ந்துள்ளனர். அதாவது ”இளமை திரும்புதே” என்ற பாடலை தனுஷ் எழுதியுள்ளார்.
அந்த பாடலுக்கு இசையமைத்ததுடன் தானே பாடியுள்ளார் அனிருத். இந்த பாட்டு ரசிகர்களிடையே அமோக வரவேற்பு பெற்று வருகிறது. தனுஷ் படத்திற்கு விரைவில் அனிருத் இசையமைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
அடுத்த ஆண்டு அனிருத் தனுஷ் படத்திற்கு இசையமைக்க உள்ளாதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த ஆண்டு இது நிச்சயம் நடக்கும் என்று கூறப்படுகிறது.