நடிகையர் திலகம் படத்தின் வெற்றியால் மிகுந்த சந்தோஷத்தில் இருக்கிறார் கீர்த்தி சுரேஷ். இதன் பிறகு நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திராத்தில் மட்டுமே நடிக்க வேண்டும் என்பதில் முழு குறிக்கோளோடு இருக்கிறார் கீர்த்தி.
நடிகையர் திலகம் வெளிவருவதற்கு முன்னரே சர்கார் படத்தில் ஒப்புக் கொண்டதால் அதில், நடிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார். அப்படத்தில் அவருக்கான ரோல் எதுவுமே இல்லாதது பெரும் ஏமாற்றத்தை அளித்திருந்தது.
இந்நிலையில், அஜித்தின் புதிய தயாரிப்பாளரான போனி கபூர், பாலிவுட்டில் தயாரிக்கும் படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கவிருக்கிறாராம். இதனை ‘பதாய் ஹோ’ என்ற படத்தினை இயக்கிய அமித் ஷர்மா இயக்கவிருக்கிறாராம்.
இது குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Facebook Comments