Spotlightசினிமா

தர்ஷனா இப்படி பண்ணது..??? – கொந்தளித்த மதுமிதா!

லகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 3 முடிவடைந்தாலும், அப்போட்டியில் நடந்த சர்ச்சையான விஷயங்களுக்கு மட்டும் முடிவே இல்லாமல் தொடர்ந்துக் கொண்டிருக்கிறது. அதிலும், பிக் பாஸ் வீட்டில் கத்தியால் கையை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்ற மதுமிதா, போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்ட பிறகு, தொலைக்காட்சி நிர்வாகம் மீது மதுமிதா புகார் அளிக்க, தொலைக்காட்சி நிர்வாகமோ அவர் மீது போலீசில் புகார் அளித்தது.

இந்த நிலையில், மதுமிதா தற்போது தர்ஷன் மீது புதிய புகார் ஒன்றை தெரிவித்துள்ளார். அதாவது, அவர் கையை அறுத்துக் கொண்டபோது தர்ஷன், சாண்டி, கவின் ஆகியோர் அருகில் இருந்தும், முதலுதவி கூட செய்யவில்லையாம். இதை பல பேட்டிகளில் அவர் சொல்லியிருக்கிறார்.

அவரது பேட்டியை பார்த்து தர்ஷனின் காதலியான ஷனம் ஷெட்டி, தர்ஷன் பிக் பாஸ் வீட்டில் இருந்து வந்ததும், தங்களிடம் மன்னிப்பு கேட்க சொல்கிறேன், அப்படி அவர் மன்னிப்பு கேட்கவில்லை என்றால், அவர் மனுஷனே இல்லை, என்று மதுமிதாவிடம் கூறினாராம்.

இது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறிய மதுமிதா, இதுவரை தர்ஷன் தன்னிடம் மன்னிப்பு கேட்கவில்லை, என்று கூறியிருக்கிறார். தர்ஷன் மீது மதுமிதா இன்னும் கடும் கோபத்தில் தான் இருக்கிறார் என்பது இதிலிருந்து தெரிகிறது.

Facebook Comments

Related Articles

Back to top button