Spotlightசினிமா

பிக்பாஸ் நிகழ்ச்சியில் டி ஆர் பி-க்காக என்னை பயன்படுத்திக் கொண்டார்கள் – சிநேகன்!

இயக்குனர் தீபக் நாராயண் இயக்கத்தில் அறிமுக நடிகர் பேரரசு நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் படம் ‘பேய் எல்லாம் பாவம்’. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது.

இவ்விழாவில் இயக்குனர் பேரரசு, இயக்குனர் வெங்கடேஷ், கவிஞர் சிநேகன், கில்டு சங்க தலைவர் ஜாகுவார் தங்கம் மற்றும் பிஆர்ஓ யூனியன் செயலாளர் பெரு துளசி பழனிவேல் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

விழாவில் வந்திருந்த அனைவரும் படக்குழுவினரை வாழ்த்தி பேசினர். கவிஞர் சிநேகன் பேசும்போது, ‘நான் இதுவரை 2500 பாடல்கள் எழுதியுள்ளேன். அதில் கிடைக்காத ஒரு அடையாளம் நூறு நாட்கள் பிக் பாஸில் இருந்ததற்கு கிடைத்தது. அவர்கள் டி ஆர் பி-க்காக, சில விஷயங்களை மட்டுமே வெளிக்காட்டினார்கள். அது அவர்கள் தொழில் அவர்களை ஒன்றும் சொல்ல முடியாது. ” என்று கூறினார். மேலும், தமிழகம் வந்தவர்களை வாழ மட்டுமே வைக்கும். இப்படத்தையும் நிச்சயம் வாழ வைக்கும் எனவும் சிநேகன் கூறினார்.

Facebook Comments

Related Articles

Back to top button