உத்திரப்பிரதேசம் மாநிலம் சந்த்கபிர் நகரில் திட்ட பணிகளுக்கான கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், பாஜக எம்.பி ஷ்ரத் திரிபதி மற்றும் பாஜக எம் எல் ஏ ராகேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதில், பாஜக எம் பி ஷ்ரத் திரிபதியின் பெயர் விடுபட்டதாக தெரிகிறது. இதனால், எம் எல் ஏ-வுடன் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி, யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் பாஜக எம் பி திரிபதி எம் எல் ஏ-வை தான் அணிந்திருந்த செருப்பால் சரமாரியாக அடித்து விட்டார்.
பதிலுக்கு, எம் எல் ஏ-வும் எம் பி மீது தாக்குதல் நடத்த, அங்கு இருந்த மற்றவர்கள் இருவரையும் சமாதானப்படுத்தினர்.
ஒரே கட்சிக்குள் இரு பெரும் தலைவர்கள் மோதிக் கொண்டதால், அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.
https://www.youtube.com/watch?v=Sww5uPT-_wY
Facebook Comments