Spotlightசினிமா

முதல் முறை அழுகிறேன் உங்களால்.. கிரேஸி மோகன் மறைவிற்கு நடிகர் சதீஷ் இரங்கல்!

ல படங்களுக்கு வசன கர்த்தாவாக இருந்து படங்களின் வெற்றிகளுக்கு உறுதுணையாக இருந்தவர் கிரேஸி மோகன்.

நேற்று திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் உயிரிழந்தார். இதனால் திரையுலகமே அதிர்ச்சியில் ஆழ்ந்தது.

சிறு வயதில் இருந்து கிரேஸி மோகனிடம் நடிப்பு பயிற்சி பெற்று இன்று நல்ல ஒரு காமெடி நடிகராக வலம் வருபவர் சதீஷ்.

கிரேஸி மோகனின் இழப்பு அவருக்கு பெரிய இழப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

மறைவு குறித்து சதீஷ் கூறும்போது, ”என் வாழ்வின் தொடக்கமாய் இருந்து… என் வாழ்க்கைக்கு அர்த்தம் தந்து… என் மாதாவாக… பிதாவாக… குருவாக… இறைவனாக இருந்தவர் இன்று இறைவனிடம் சென்று விட்டார். நீங்கள் இருந்த வரை உங்களால் சிரித்து மட்டுமே பழகிய நாங்கள் முதல் முறையாக அழுகிறோம்.. நீங்கள் இல்லாததால்” என்று மன வருத்தத்துடன் கூறியுள்ளார்.

Facebook Comments

Related Articles

Back to top button