
கொரோனா தொற்றைத் தடுக்க ஏப்ரல் 14 வரை ஊரடங்கு உத்தரவை பிரதமர் மோடி அறிவித்து 8 நாட்கள் ஆகின்றன. கொரோனா தொற்று வேகமாக பரவிவரும் சூழலில், ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்ற கேள்வியும் எழுந்தது. அதுகுறித்து இன்று அனைத்து மாநில முதல்வர்களுடனும் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார் பிரதமர் மோடி.
இந்நிலையில் நாளை காலை 9 மணிக்கு நாட்டு மக்களுடன் சில முக்கிய தகவல்களைக் காணொலி மூலம் பகிரவுள்ளதாக பிரதமர் மோடி தனது டிவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
Facebook Comments