Spotlightசினிமா

‘சர்வைவர்’ நிகழ்ச்சியின் போட்டியாளர்களின் முதல் பட்டியலை வெளியிட்டது ஜீ தமிழ்!!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் உலகின் மிகப்பெரிய ரியாலிட்டி நிகழ்ச்சியான ‘சர்வைவர்’ ஒளிபரப்பாகவுள்ளது’ என்ற அறிவிப்பினைத் தொடர்ந்து, அதுகுறித்து ஊரெங்கிலும் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது மட்டுமில்லாமல், ரசிகர்களும் கூடுதல் தகவல்களை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். தென்னிந்திய பொழுதுபோக்கு தொலைக்காட்சிகளில் முதல் முறையாக ஒளிபரப்பாகவிருக்கும் இது போன்ற ஒரு ரியாலிட்டி மற்றும் டிராமா கலந்த நிகழ்ச்சியில் பல்வேறு நட்சத்திரப் போட்டியாளர்கள் பங்கேற்கவுள்ளனர். ஆப்பிரிக்க கடற்கரை பகுதியில் உள்ள எழில்மிகு சான்சிபார் தீவுகளில், போட்டியாளர்கள் எப்படி இயற்கையின் ஆற்றலை எதிர்கொண்டு 90 நாட்கள் தாக்குப்பிடித்து வாழப்போகிறார்கள் என்பதையே இந்நிகழ்ச்சி நேயர்களுக்கு காட்டவிருக்கிறது.

நடிகர் சிவகார்த்திகேயன் சர்வைவர் நிகழ்ச்சியின் முதல் காட்சி டிரைலரை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 22-ம் தேதியன்று உறுதிசெய்யப்பட்ட போட்டியாளர்கள் பற்றிய விவரங்கள் ஒரு டிரைலராக நடிகர் ஆர்யா அவர்களால் வெளியிடப்பட்டது. ஆர்யாவின் நடிப்பில் வெளிவந்த ‘சார்பட்டா பரம்பரை’ திரைப்படத்தில் அவரது அபாரமான நடிப்பும், தளராத எண்ணமும் அனைவரையும் பெரிதும் கவர்ந்ததுடன், அப்படத்திற்காக அவர் தன் உடலை கட்டுக்கோப்பாக மாற்றியது ரசிகர்களை ஆச்சரியப்படவும் வைத்தது. போட்டியாளர்களை அறிமுகம் செய்துவைக்கும் இந்த பிரத்தியேக சர்வைவர் முன்னோட்டத்தை ‘டிஜிட்டல் வழியாக’ நடிகர் ஆர்யா வெளியிட்டது மிகவும் பொருத்தமானதாக இருந்தது. மனித நடமாட்டம் இல்லாத அந்த தீவில் போட்டியாளர்கள் எப்படி மனம் தளராமல் உறுதியுடன் இருக்கவேண்டும் என்பதை கூற அவரே மிகச்சரியான நபர் ஆவார். இம்முன்னோட்டத்தில் நேயர்களுக்கு சர்வைவர் நிகழ்ச்சியின் பிரம்மாண்டத்தை மட்டுமன்றி போட்டியாளர்களின் பெயர்களும் அதில் வெளியிடப்பட்டது. ரசிகர்களின் பார்வைக்கு விருந்தாக இந்த பிரம்மாண்ட சர்வைவர் நிகழ்ச்சி வரும் செப்டம்பர் 12 முதல் தினமும் இரவு 9:30 மணிக்கு ஜீ தமிழில் ஒளிபரப்பாகவுள்ளது.

பிரபல நடிகர்கள் நந்தா, மற்றும் விக்ராந்த், சென்னை 28 திரைப்படம் மூலமாக பிரபலமடைந்த நடிகையும், தொலைக்காட்சி பிரபலமுமான விஜயலக்ஷ்மி, தமிழ் மற்றும் பல்வேறு மொழிகளில் சண்டை பயிற்சியாளராக பணியாற்றிய நடிகர் பெசன்ட் ரவி, பிரபல மாடல் மற்றும் நடிகை காயத்ரி ரெட்டி, நடிகை ஸ்ருஷ்டி டாங்கே; நகைச்சுவை நடிகர் தம்பி ராமையா அவர்களின் மகனும், வளர்ந்துவரும் தமிழ் திரைப்பட இயக்குனரும் நடிகருமான உமாபதி ராமையா, மற்றும் விடியோ ஜாக்கியும், யூடியூப் பிரபலமுமான விஜே பார்வதி ஆகியோர் போட்டியாளர்களாக அறிமுகம் செய்துவைக்கப்பட்டனர்.

இம்முன்னோட்டத்தில், சர்வைவர் நிகழ்ச்சியை வழிநடத்தி வழங்கும் தொகுப்பாளர் ஆக்ஷ்ன் கிங் அர்ஜுன் அவர்களின் அசரவைக்கும் தோற்றமும், அதிரடி காட்சிகளும் சிறிது காட்டப்பட்டன. சர்வைவரின் 90-நாள் பயணம் எப்படி இருக்கும், போட்டியாளர்கள் எத்தகைய சாகசங்களையும், சவால்களையும் எதிர்கொள்ள வேண்டும் என்பதற்கு அதுவே ஒரு உதாரணமாகவும் இருந்தது. ‘விழுந்தாலுமே எழுந்தோடுவேன்’ என்கிற எழுச்சியான பாடல் வரிகளையும், அட்டகாசமான காட்சியமைப்புகளையும் கொண்ட இந்த முன்னோட்டம், மனிதர்களின் விடாமுயற்சி மற்றும் மன உறுதியை வெளிக்கொணர்வதாக உள்ளது. வரும் செப்டம்பர் 12 முதல் நேயர்கள் தங்களது இல்லத் தொலைக்காட்சிகளில் ஜீ தமிழ் சேனலுடன் நகராமல் அமரப் போகிறார்கள் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.

Facebook Comments

Related Articles

Back to top button