Spotlightசினிமா

பிரதமர் மோடிக்கு கோயில் கட்டி வழிபடும் திருச்சி விவசாயி

திருச்சி, துறையூர் அருகேயுள்ள எரகுடி கிராமத்தை சேர்ந்தவர் சங்கர் (வயது 50) இவர் ஒர விவசாயி.

இவருக்கு திருமணமாகி பானுமதி (40) என்ற மனைவியும் தீபா என்ற மகளும், சதீஷ்குமார், சூர்யா ஆகிய 2 மகன்களும் உள்ளனர்.

சிறுவயது முதலே பிரதமர் நரேந்திரமோடியின் தீவிர ரசிகராக இருந்து வருகிறாராம் விவசாயி சங்கர்.

மேலும் எரகுடி விவசாய சங்க தலைவராக இருந்து வருகிறார் சங்கர்.

இவருக்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு கோவில் கட்டி சிலை வைத்து வழிபட வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசையாம்.

இந்த நிலையில் அதே எரகுடியில் உள்ள தனது விவசாய தோட்டத்தில் மோடிக்கு கோயில் கட்டி வழிபட சிலை அமைத்துள்ளார்.

சிலைக்கு பாலாபிஷேகம் செய்து, தீபாராதனை காண்பித்து வழிபாடு நடத்தி வருகிறாராம்.

விவசாயத்தில் கிடைத்த ஓரளவு பணத்தை வைத்து கோயில் கட்டினராம்.

8 மாதங்களுக்கு முன்பு இந்த பணியை தொடங்கினாராம்.

பாஜக கட்சியை தாண்டி பிரதமர் மோடி ஒரு நல்ல மனிதர் ஆவார். அவர் கொள்கையால் ஈர்க்கப்பட்டு இந்த கோவிலை கட்டியதாக சங்கர் தெரிவித்துள்ளார்.

TN BJP worker Sankar builds temple for Narendra Modi

Facebook Comments

Related Articles

Back to top button