Spotlightசினிமாதமிழ்நாடு

விகே சசிகலா தலைமையில் கோலாகலமாக நடைபெற்ற டிடிவி தினகரனின் மகள் திருமணம்..!!

டிடிவி தினகரனின் மகள் ஜெயஹரிணிக்கும், தஞ்சாவூரைச் சேர்ந்த காங்கிரஸ் முன்னாள் எம்.பி. துளசி வாண்டையார் பேரனும், கிருஷ்ணசாமி வாண்டையார் மகனுமான ராமநாதன் துளசி வாண்டையாருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டதை அடுத்து, திருவண்ணாமலை வேங்கிக்கால் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று காலை வி.கே.சசிகலா தலைமையில் திருமணம் நடைபெறுகிறது.

இதன் காரணமாக தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான அமமுக கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கடந்த இரண்டு தினங்களாக திருவண்ணாமலையில் முகாமிட்டுள்ளனர். திருமணத்தை முன்னிட்டு நேற்று இரவு பெண் அழைப்பு அண்ணா நுழைவு வாயில் அருகே உள்ள தனியார் தங்கும் விடுதியில் இருந்து நடைபெற்றது.

மேளதாளங்கள் முழங்க குதிரைகள் பூட்டப்பட்ட சாரட் வண்டியில் ஊர்வலமாக நடைபெற்றது. அண்ணா நுழைவு வாயில் முதல் வேங்கிக்கால் தனியார் திருமண மண்டபம் வரை சாலைகளில் இரு புறமும் வண்ணவண்ண மின்விளக்குளால் அலங்கரிக்கப்பட்டு இரவு பகல்போல் காட்சி அளித்தது.இதனைத்தொடர்ந்து திருமண மண்டபத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

நேற்று வரவேற்பு நிகழ்ச்சிக்கு அதிமுக கொடி கட்டிய காரில் வருகை தந்த வி.கே.சசிகலாவுக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

ஏற்கனவே திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் உள்ள கல்யான சுந்தரேஸ்வரர் சன்னதியில் திருமணம் நடத்துவதாற்காக அனுமதி பெறப்பட்ட நிலையில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாகவும் மற்றும் இன்று அண்ணாமலையார் திருக்கோவிலில் திருக்கார்த்திகை திபத்திருவிழாவை முன்னிட்டு பந்தகால் முகூர்த்தம் நடைபெற உள்ளதாலும், திருமணத்திற்கு அதிக அளவில் கட்சி பிரமுகர்கள், உறவினர்கள் கோவிலுக்குள் வருகை புரிவார்கள் என்பதாலும் திருமண நிகழ்வுகள் அனைத்தும் திருமண மண்டபத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

மேலும் திருமணம் முடிந்தவுடன் மணமக்கள் அண்ணாமலையார் திருக்கோவிலில் தரிசனம் மட்டும் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

திருமண விழாவையொட்டி கூட்டநெரிசலை தவிர்க்க திருவண்ணாமலை-வேலூர் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Facebook Comments

Related Articles

Back to top button